திருக்குறள்

1140.

யாம்கண்ணிற் காண நகுப அறிவில்லார் யாம்பட்ட தாம்படா ஆறு.

திருக்குறள் 1140

யாம்கண்ணிற் காண நகுப அறிவில்லார் யாம்பட்ட தாம்படா ஆறு.

பொருள்:

காதல் நோயினால் வாடுவோரின் துன்பத்தை அனுபவித்தறியாதவர்கள்தான், அந்த நோயினால் வருந்துவோரைப் பார்த்து நகைப்பார்கள்.

மு.வரததாசனார் உரை:

யாம் பட்ட துன்பங்களைத் தாம் படாமையால் அறிவில்லாதவர் யாம் கண்ணால் காணுமாறு எம் எதிரில் எம்மைக்கண்டு நகைக்கின்றனர்.

சாலமன் பாப்பையா உரை:

நான் பார்க்க, இந்த அறிவற்ற மக்கள் என்னைப் பார்த்துச் சிரிக்கின்றனர். அப்படிச் சிரிக்க காரணம், நான் அனுபவித்த துன்பங்களை அவர்கள் அனுபவிக்காததே!.